மன்னர் ஆட்சி தொடர்கிறது: சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு
தமிழக அரசியல் களத்தில் ஒரு பக்கம் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியல் எனப்படும் "மன்னர் ஆட்சி" எவ்விதத் தடையுமின்றித் தொடர்கிறது. தி.மு.க சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவினாலும், சட்டமன்றத்திற்குள் கட்சியின் குரலாகவும், எதிர்க்கட்சி வரிசையின் முக்கிய முகமாகவும் உதயநிதி செயல்படுவார் என்பதை இந்தத் தேர்வு உறுதிப்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத சூழலில், தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி முதலில் வெளியேறி விஜய்யுடன் கைகோர்த்தது. அதே சமயம், தி.மு.க கூட்டணியில் நீடிக்கும் இடதுசாரிகள், வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் த.வெ.க ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க முன்வந்தன. இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபித்த விஜய், இன்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார்.
இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், த.வெ.க தலைவர் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒருபுறம் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மறுபுறம் தி.மு.க-வில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, தமிழக அரசியலில் எதிர்காலத்தில் "விஜய் vs உதயநிதி" என்ற நேரடிப் போட்டிக்கு அடித்தளம் அமைத்துள்ளது.

No comments: