ஏதோ ஒன்று நடக்குது!" - ஜோதிமணியின் எக்ஸ் பதிவு! ஆளும் தரப்பை அதிர வைத்த 'அந்த' ஒரு வார்த்தை
தேர்தல் ரிசல்ட் வருவதற்கு முன்பே தமிழக அரசியல்வாதிகள் ஒவ்வொருவராகத் தங்களின் மனக்கிடக்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் போட்டுள்ள "களத்தில் மாற்றத்தை உணர முடிகிறது" என்ற பதிவு இப்போது இணையத்தில் வைரல்.
களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளைப் பல அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினாலும், ஜோதிமணி அதை "தெளிவாக உணர முடிகிறது" என்று நுணுக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சில எக்ஸிட் போல் கணிப்புகள் விஜய்க்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களை வாரி வழங்கியுள்ள நிலையில், ஜோதிமணியின் இந்தப் பதிவு அந்தக் கணிப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அரசியல் மேகங்கள் எந்தப் பக்கம் நகர்கின்றன என்பதை ஜோதிமணி முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.

No comments: